யார் யாருக்கோ தமிழகத்தில் முதலமைச்சராகும் ஆசை வந்துவிட்டது…!

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழகத்தில் யார் யாருக்கோ முதலமைச்சராகும் ஆசை வந்து விட்டதாக  விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னாண்டான் தெருவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வேட்டி, சேலை, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமாவில் நடித்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment