மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி …!

மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத … Read more

மாட்டிறைச்சி & பன்றிக்கறிக்கு தடை.!? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்.!?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உன்ன கூடாதாம். ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமாம். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. அரையிறுதி வாய்ப்புக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர், தற்போது, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 … Read more

மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குவேன்- யுவராஜ் சிங் அறிவிப்பு!உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்,2019 ஜூன் மாதம்,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,தனது சர்வதேச ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார், அந்த நேரத்தில் அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது,அணிக்கு யுவராஜ் போதுமானவர் என்று … Read more

இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது-இலங்கை அணி கேப்டன்..!

இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளது என இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இன்று மதியம் 3 மணியளவில் முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடக்கிறது. இதில் இளம்வீரர்களை கொண்டு இந்திய அணி தவான் தலைமையில் விளையாடுகிறது. இலங்கை கேப்டன் தசுன் ஷானகா தற்போது தெரிவித்துள்ளதாவது, இரண்டு அணிகளும் சமமாக தொடங்கும். இந்திய … Read more

#BREAKING : இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி…!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு லேசான அறிகுறிகள் தெரிய வந்தது. இதனையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் ஒருவருக்கொருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், … Read more

கிரிக்கெட் விளையாடி அசத்திய ஆந்திர முதல்வர்…!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த நிலையில், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். திடீரென்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட்  விளையாட தொடங்கியுள்ளார். எம்எல்ஏ அபினேஷ் ரெட்டி பந்துவீச ஜெகன்மோகன் ரெட்டி பேட்டிங் செய்துள்ளார். ஆய்வு … Read more

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்..??

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வருட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்புக்காரணமாக பாதியிலேயே இப்போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏனென்றால், இப்போட்டியில் பங்கு கொண்ட சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் 29 … Read more

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை-யுவராஜ் கருத்து..!

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் … Read more

இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று … Read more

கிரிக்கெட் மைதானத்தில் காயங்களுடன் உயிரிழந்த வீரர்கள் யார் என்று தெரியுமா..!

கிரிக்கெட் விளையாடும்போது காயமடைந்து இறந்த வீரர்களின் பட்டியல் இங்கே: 1.பிலிப் ஹியூஸ்  (ஆஸ்திரேலியா, 25) – 2014 தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) ஒரு பவுன்சர் பந்தால் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் மூளையில் பெரும் இரத்தப்போக்கு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, ஹியூஸ் சிட்னி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு அறுவை  சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து … Read more