அப்படிப்போடு…ஊழல் புகார் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஆந்திரா முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி … Read more

#NewCabinet:அமைச்சரான நடிகை ரோஜா – பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட  25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.மாநில தலைநகர் அமராவதியில் உள்ள மாநில செயலகம் அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில்,கவர்னர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், … Read more

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

ஆந்திரா:நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.இந்த புதிய அமைச்சரவையில் … Read more

அதானி நிறுவனத்திற்கு குட்பை – ஆந்திர அரசு அதிரடி!

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. ஏலத்தில் அதானி நிறுவனம்: இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது. அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக … Read more

கிரிக்கெட் விளையாடி அசத்திய ஆந்திர முதல்வர்…!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரண்டு நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த நிலையில், கடப்பாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். திடீரென்று ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட்  விளையாட தொடங்கியுள்ளார். எம்எல்ஏ அபினேஷ் ரெட்டி பந்துவீச ஜெகன்மோகன் ரெட்டி பேட்டிங் செய்துள்ளார். ஆய்வு … Read more

“இசை ஆர்வலர்களின் இதயங்களில் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்.பி.பி!”- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

உடல்நலக்குறைவால் காலமான எஸ்.பி.பி. மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அவரின் மறைவிற்கு ஆந்திர மாநில முதல்வர் … Read more

அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை – ஆந்திரா முதல்வர்

அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை. இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால், 4,37,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,975 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் நோய்தொற்று ஏற்பட்டவர்களை களங்கப்படுத்தும் விதத்தில் … Read more

எல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்கும் -ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

எல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்க முடிவு செய்துள்ளதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 30-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.கொரோனாவின்  வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்  உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய முடிவு எடுத்துள்ளார் . ஆந்திராவில் உள்ள  தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் … Read more

சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்தார்.அதன்படி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அம்மாநில கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.இதனை கவர்னர் ஏற்று கொண்டுள்ள நிலையில்  ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30 பதவி ஏற்கிறார். இந்நிலையில் ஆந்திரா அமராவதியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். … Read more