#BREAKING : இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி…!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு லேசான அறிகுறிகள் தெரிய வந்தது. இதனையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் ஒருவருக்கொருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றோருவருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை  வெளியாகியுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட வீரர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.