மூன்று கண்களுடன் பிறந்த பூனை வைரலாகும் வீடியோ!!

இணையத்தை பரபரப்பாக்கிய மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டி. இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறது. இதேபோன்று வியப்பூட்டும் வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர் மாவட்டத்தில், கால்களுக்குப் பதிலாக கொம்புகளுடன் பிறந்த குழந்தையின் வீடியோ வைரலானது.

பூனையை திருமணம் செய்து கொண்ட பெண் .., காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா … Read more

#viral video: பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடி..!கல்லூரி கால்பந்து ரசிகர்கள்..!

பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடியை பயன்படுத்திய கல்லூரி கால்பந்து ரசிகர்கள் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை அன்று நடந்த 22 ஆம் எண் மியாமி மற்றும் அப்பலாச்சியன் ஸ்டேட் இடையேயான கால்பந்து ஆட்டத்தின் போது அனைவராலும் கவரப்பட்ட கேட்ச் ஒன்று நடந்தது. அது மைதானத்தில் நிகழவில்லை மாறாக அங்குள்ள ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் ஒரு பூனை ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் மேல் தளத்தின் முகப்பில் இருந்து அது கீழே விழும் நிலைக்கு … Read more

பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதல்-வீடியோ..!

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது. பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு … Read more

சிறைக்குள் கஞ்சா கடத்திய பூனை கைது – பனாமா சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பூனை பனாமாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பனாமா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா மற்றும் கோக்கைன் கடத்தப்படுவது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. பனாமா நகரத்தின் காளான் மாகாணத்தில் உள்ள நியூஷா எஸ்பெரான்ஷா எனும் சிறைச்சாலை மிகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட சிறைச்சாலையாம். இங்கு 1800 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனராம். ஆனால் இந்த சிறைச்சாலைக்குள்ளேயே கஞ்சா மற்றும் … Read more

மம்தா தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான்- பாஜக தலைவர் திலீப் கோஷ்!

மம்தா பானர்ஜி தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான் என வங்காளத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் பிரச்சாரப் பணிகள் நடைபெற்றபோது அண்மையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,  … Read more

குழந்தையை காக்கும் பாதுகாவலன் – இணையத்தை கலக்கும் பூனையின் செயல்!

குழந்தை ஜன்னலில் எற முயற்சிக்கும் பொழுது, வேண்டாம் தவறு என்பது போல பூனை ஒன்று தட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், 5 அறிவு கொண்ட ஜீவராசியின் அறிவையும் பலர் புகழ்ந்து வருகின்றனர். தற்பொழுதைய ட்டத்தில் மனிதர்களை விட விலங்குகள் தான் அறிவு ஜீவிகளாக விளங்குகின்றனர். குறிப்பாக கவனக்குறைவாக பெற்றோர்கள் இருந்தாலும், குழந்தைகளை கவனித்து கொள்ளும் நாய்களை நாம் கேள்விபட்டிருப்போம். வீடியோக்கள் மூலம் பார்த்து கூட இருப்போம். ஆனால், பூனைகள் அது போல செய்து … Read more

இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய பூனை!

இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய குட்டி பூனையின் செயல் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாய் நாட்டில் உள்ள உள்ளூர் பூங்கா யானை ஒன்று அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது பூங்காவில் இருந்தாலும் உணவைத் தடி இரவு நேரங்களில் மக்களின் தோட்டங்களில் சென்று அங்கு உள்ள செடிகளை எல்லாம் மிதித்து விடுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நக்கோன் நயோக்கில் எனுமிடத்தில் செல்லப்பிராணியாக பூனை ஒன்று … Read more

“டிக்கெட் எடுக்கலயா.. அப்ப வெளியே போடா!” ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பூனை!

ரயிலில் டிக்கெட் எடுக்காத பூனையை பாதுகாவலர்கள் வெளியே அழைத்து செல்லும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு சீனா மாகாணத்தில் விரைவு ரயில் ஒன்று, புறப்பட காத்திருந்தது. அப்பொழுது ரயிலுக்குள் பூனை ஒன்று இருப்பதை கண்டறிந்த ரயில்வே பாதுகாவலர் ஒருவர், பூனையை ரயிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். இதனை ரயிலில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்தார். அதன்பின் அந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பாதுகாவலர் கூறுவது போல, “டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்க முடியாது” என குறிப்பிட்டிருந்தார். … Read more

இங்கிலாந்தில் அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பூனை!

இங்கிலாந்தில் அரசு வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பூனை. இங்கிலாந்து வெளியுறவுத் துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில், பாமஸ்டர்ன் என்று பெயரிடப்பட்ட பூனை  எலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தது. இந்த பூனையை கடந்த 2016-ம் ஆண்டு, பாட்டர்ஸியா பகுதியில் உள்ள நாய்கள், பூனைகள் காப்பகத்திலிருந்து எலி பிடிக்கும் பணிக்காக இங்கிலாந்து அரசு தத்தெடுத்தது. இங்கிலாந்து வெளியுறவுத் துறை கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் லார்டு பாமர்ஸ்டனின் பெயர் வைக்கப்பட்டது. இந்த பூனை நான்கு … Read more