இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய பூனை!

இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய குட்டி பூனையின் செயல் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

தாய் நாட்டில் உள்ள உள்ளூர் பூங்கா யானை ஒன்று அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது பூங்காவில் இருந்தாலும் உணவைத் தடி இரவு நேரங்களில் மக்களின் தோட்டங்களில் சென்று அங்கு உள்ள செடிகளை எல்லாம் மிதித்து விடுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நக்கோன் நயோக்கில் எனுமிடத்தில் செல்லப்பிராணியாக பூனை ஒன்று ஒருவரின் வீட்டில் வளர்ந்து வருகிறது. அவரது வீட்டு தோட்டத்தில் இரவு நேரத்தில் இந்த யானை உள்ளே சென்றுள்ளது.

அப்பொழுது தனக்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்த குட்டி பூனையின் கண்ணில் இந்த யானை மாட்டிவிட்டது. மனிதர்களிடம் மாட்டி இருந்தால் கூட அவர்களை மிரட்டி தப்பித்து இருக்கும் போல அந்த யானை, ஆனால் இந்த பூனையிடம் மாட்டி விட்டு தப்பிக்க முடியாமல் திணறி உள்ளது. இதுகுறித்து ஆச்சரியமூட்டும் படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

catelephant

author avatar
Rebekal

Leave a Comment