குழந்தையை காக்கும் பாதுகாவலன் – இணையத்தை கலக்கும் பூனையின் செயல்!

குழந்தை ஜன்னலில் எற முயற்சிக்கும் பொழுது, வேண்டாம் தவறு என்பது போல பூனை ஒன்று தட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், 5 அறிவு கொண்ட ஜீவராசியின் அறிவையும் பலர் புகழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுதைய ட்டத்தில் மனிதர்களை விட விலங்குகள் தான் அறிவு ஜீவிகளாக விளங்குகின்றனர். குறிப்பாக கவனக்குறைவாக பெற்றோர்கள் இருந்தாலும், குழந்தைகளை கவனித்து கொள்ளும் நாய்களை நாம் கேள்விபட்டிருப்போம். வீடியோக்கள் மூலம் பார்த்து கூட இருப்போம். ஆனால், பூனைகள் அது போல செய்து அதிகளவில் பார்த்திருக்க முடியாது, ஆனால் தற்பொழுது பூனை ஒன்று குழந்தையை காப்பாற்ற செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை ஒன்று ஜன்னல் கம்பியில் தொற்ற முயற்சிக்கும் பொழுது அருகிலிருந்து பூனை அது தவறு என்பது போல பூனை குழந்தையின் கையை தட்டி விடுகிறது. இந்த வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தையே கலக்கி வருகிறது. பூனைக்கு இவ்வளவு அறிவா என பலரும் வியந்து வருகின்றனர்.

author avatar
Rebekal