பூனையை திருமணம் செய்து கொண்ட பெண் .., காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியா எனும் பெயருடைய தனது வளர்ப்பு பூனையை திருமணம் செய்து கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 40 வயதுடைய தெபொரா எனும் பெண்மணி தனது வளர்ப்பு பூனைக்கு இந்தியா என பெயரிட்டுள்ளார். இந்த பூனையுடன் சிட்காப் எனும் பகுதியில் வசித்து வருகிறார்.

அவர் வசித்து வரக்கூடிய வீட்டின் உரிமையாளர் அவருடைய பூனையை அடிக்கடி துன்புறுத்துவதாகவும், பூனையை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுமாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பூனையை தெபொரா திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் மணப்பெண் மணமகன் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இது குறித்து பேசியுள்ள தெபொரா இனி எனக்கு இழப்பதற்கும் எதுவும் இல்லை, புதிதாக எதுவும் கிடைக்கபோவதுமில்லை. ஏற்கனவே நான் எனது இரண்டு குழந்தைகளை இழந்துள்ளேன். அதனால் தான் எனது இந்தியாவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

எனது பூனையை நான் எப்பொழுதும் பிரிய மாட்டேன் என நான் முடிவு செய்துள்ளேன். அது எனது வளர்ப்பு விலங்கு மட்டுமல்லாமல் எனது பிள்ளையை போல பார்த்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் எங்களை இனி யாரும் பிரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal