மம்தா தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான்- பாஜக தலைவர் திலீப் கோஷ்!

மம்தா தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான்- பாஜக தலைவர் திலீப் கோஷ்!

மம்தா பானர்ஜி தன்னை புலி என சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் பூனை தான் என வங்காளத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ் அவர்கள் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனைவரும் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் பிரச்சாரப் பணிகள் நடைபெற்றபோது அண்மையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,  நான் கோழையல்ல, வலிமையான நபர் எனவும், எவ்வளவு காலம் வாழ்கிறனோ அதுவரை ராயல் வங்காளத்தின் புலி போல வாழ்வேன் என பேசியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து இன்று பேசியுள்ள வங்காள பாஜக கட்சியின் தலைவர் திலீப் கோஷ் அவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை ஒரு புலி என கருதுகிறார். ஆனால் அவரது நிலை உண்மையிலேயே ஒரு பூனையின் நிலைதான். அவரது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூட அவருக்கு அஞ்ச மாட்டார்கள் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube