இன்று முதல் ஜன.18 ஆம் தேதி வரை…அனுமதி இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் … Read more

#Breaking : சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் …!

பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. … Read more

600 சீன பிராண்டுகளுக்கு நிரந்தரமாக தடை விதித்த அமேசான்..!

போலி விமர்சனம் காரணமாக 600 சீன பிராண்டுகளை அமேசான் நிறுவனம் தடை செய்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்துள்ளது.அதே நேரத்தில் இந்த பிராண்டை விற்கும் 3000 விற்பனையாளர்களின் கணக்குகளும் அகற்றப்பட்டது.அமேசான் நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,அமேசான் நிறுவனம் கூறுகையில்: “வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக கடினமாக அமேசான் உழைக்கிறது. எங்கள் தளத்தில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் … Read more

#Breaking:மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! இவற்றிற்கெல்லாம் தொடர்ந்து தடை…?

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் … Read more

#BREAKING: இந்திய பயணிகள் வர தடை விதித்தது இலங்கை..!

இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவின் … Read more

#BREAKING: பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை.!

பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்கக்கூடாது என்று தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி, எண்ணெய்யை  பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக்கூடாது என்பதை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமையல் எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்வதற்கான … Read more

ஜீன்ஸ், டி-ஷர்ட், செருப்புகளுக்கு தடை – வாரத்திற்கு ஒரு முறை காதி.!

மகாராஷ்டிரா அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகள் மற்றும் செருப்புகளை தடைசெய்து, வாரத்திற்கு ஒரு முறை காதி அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர்கள் மற்றும் அரசாங்கப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், ஒரு அரசு ஊழியருக்கு பொருத்தமற்றதாகக் கருதப்படும் வகையில் ஆடை அணிவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களைப் பற்றி மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கி வருகிறது என்று பொது நிர்வாகத் துறை டிசம்பர் 8 அன்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் காதி அணிய வேண்டும் … Read more

மகாராஷ்ராவில் நுழைய தடை..தாக்கரே தடால்!

மஹாராஷ்டிராவில் சி.பி.ஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மாநிலத்தின் குறிப்பிட்ட சில முக்கிய வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா அரசு மத்திய புலனாய்வு சபை எனப்படும் (சிபிஐ)க்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அரசு கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வுப்பிரிவுக்கு (சிபிஐ)க்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றது.இதனால் சிபிஜ மாநில அரசின் அனுமதியின்றி நுழைய முடியாது. சிபிஐ நுழைய தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக எடுத்த … Read more

ஏலத்தில் உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை

இயற்கை எரிவாயுவை விற்பனை ஏலத்தில் பற்கேற்க அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை எரிவாயுவை விற்பனைக்கான ஏலத்தில் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் பங்கற்க தடை அதே போல் உறுப்பு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தடை குறித்து மத்திய அரசு சுதந்திரமான அமைப்பே ஏல நடைமுறையை முன்னின்று நடத்தும் என்று கூறியுள்ளது.  

#BREAKING: இந்தியாவில் PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை..!

இந்தியாவில் PUBG உட்பட  118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக  சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.  இதைதொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், … Read more