#Breaking:மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! இவற்றிற்கெல்லாம் தொடர்ந்து தடை…?

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.அதன்படி,

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் .
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.