அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

கோவிலில் பிரார்த்தனையை இந்த இடத்தில் தான் சொல்ல வேண்டுமா? அட இது தெரியாம போச்சே….!

Hindu Prayers in Places of Temples

ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக  இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் … Read more

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

Shiva

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே … Read more

“தீராத நோய் மற்றும் மன நோயை தீர்க்கும் யோக நரசிம்மர் கோவில்”

Arulmigu Yoga Narasinga Perumal Thiru Kovil

நரசிம்மரிடத்தில் நாளை என்பது இல்லை என்ற அடிப்படையில் நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அன்றே  என்பது ஐதீகம் . கோவிலின் சிறப்பு: யோக நரசிம்மர் கோவில் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்திருத்தலம் 65 ஆவது திவ்ய தேசமாகும். இக்கோயில் கிட்டத்தட்ட 2000 வருடம் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலுக்கு செல்ல 1305 படிக்கட்டுகள் கடந்து செல்ல வேண்டும். இங்கு உள்ள நரசிம்மர் 11 மாதங்கள் … Read more

யானை லட்சுமி உயிரிழப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்!

நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு.  புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் … Read more

#BREAKING: கோயிலுக்குள் செல்ல பட்டியலினத்தவருக்கு அனுமதி!

சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு.  பழனி அருகே செல்வா விநாயகர், உச்சிகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர், புகாருக்குள்ளான மோதில்ராம், சின்னசாமி மற்றும் ராமசாமி பதில்தர வேண்டும் … Read more

#Breaking:சற்று முன்…கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த அனுமதி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

தமிழகத்தில் கோயில்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,கோயில் விழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது,கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம்.ஆனால்,ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து,இதுதொடர்பான மனுக்களை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,மதுரை முதலைக்குளம் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. … Read more

இந்தியாவில் அதிக கோயில்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா..? – மும்பை ஐஐடி

மும்பை ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளது என தகவல். நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் தான் அதிகமான கோயில்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் 79,154  கோயில்களும்,மகாராஷ்டிராவில், 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு  வங்காளத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் … Read more

கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி – உயர்நீதிமன்ற கிளை

மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து. திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி. விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் … Read more

இன்று முதல் ஜன.18 ஆம் தேதி வரை…அனுமதி இல்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இன்று முதல் (14-01-2022) முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் … Read more