ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

pm modi

திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகல் ராமேஸ்வரம் சென்றடைந்தார். பின்னர் சாலை மார்க்கமாக பயணித்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார். அப்போது,  கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த … Read more

ராமேஸ்வரம் – 22 புனித தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி!

pm modi

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் இறங்கு தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ராமேஸ்வரம் சென்றார். பிரதமர் மோடிக்கு வழிநெடுங்கிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, சற்று நேரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் … Read more

திருச்சியில் சாமி தரிசனம் நிறைவு… அடுத்து ராமேஸ்வரம் புறப்பட்ட பிரதமர் மோடி!

pm modi

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, ரங்கா ரங்கா கோபுரம் முன்பு மேள தாளங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, உற்சவர் ரங்கநாதரை வழிபட்டார். அதன் பின்னர் கருடாழ்வார், மூலவர், தாயார், பெரிய பெருமாள், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய … Read more

பாம்பன் பாலத்தில் IIT பொறியாளர்கள் ஆய்வு.! டிசம்பர் 31 வரையில் ரயில் செல்ல தடை.!

பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. –  ரயில்வே துறை. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து … Read more

#Breaking:நாளை முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி … Read more

#Breaking:நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம்…ஜனவரி 1-ல் ரயில் மறியல் – மீனவர்கள் சங்கம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 … Read more

ராமேஸ்வரம்:மண்டபம் அருகே கடலில் நிகழ்ந்த ஓர் அரிய நிகழ்வு..!

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே கடல் மீது சூறாவளி தோன்றிய ஒரு அரிய நிகழ்வு தென்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகே நேற்று தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் சூறாவளி தோன்றியதைக் கண்டனர். இதனை,மீனவர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து,ராமநாதபுரம் மீன்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில்: “இந்த நிகழ்வு சூறாவளி நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகிறது.அவை காற்றின் பத்திகளை(rotating columns of air) தண்ணீருக்கு … Read more

ராமேஸ்வரம் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் முக்கிய நாள்: இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு … Read more

சித்திரை அமாவாசை முன்னிட்டு..!! ராமேஸ்வரத்திற்கு திரண்ட பக்தர்கள்…!!

நேற்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர் முதலில் தங்கள் முன்னோர்களுக்காக செய்ய வேண்டிய திதி பூஜைகளை செய்தனார்,பின்னர் கடலில் நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் பக்தர்களின் நெரிசலை சமளிக்க முடியாமல் போலீசார்  கோவில் ஊழியர்களின் உதவியை நாடினர் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 முதல் 6வது தீர்த்தம் முதலானவைகள் மூடப்பட்டது இதனால் 17 தீர்த்தங்கள் மட்டுமே … Read more