#Breaking:தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேஸ்வரம்:மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமேஷ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12  தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், மேலும்,அவர்களது ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

#Breaking:நாளை முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம்,மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. மொத்தம் 16 பேர்: அதைபோல்,தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.குறிப்பாக,எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி … Read more

கச்சத்தீவு அருகே 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது..!

கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது. கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரம்  மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை 6 படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. 43 மீனவர்களையும் இலங்கை கடற்படை நெடுந்தீவுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.