பாம்பன் பாலத்தில் IIT பொறியாளர்கள் ஆய்வு.! டிசம்பர் 31 வரையில் ரயில் செல்ல தடை.!

பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. –  ரயில்வே துறை.

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment