ராமேஸ்வரம் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவின் முக்கிய நாள்:

  • இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு திருவிழா தொடங்குகிறது.
  • அன்று இரவே சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்தில், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி முக்கிய ரத வீதிகளில் உலா வருகின்ற  நிகழ்வு நடக்கிறது.
  •  2வது நாளான பிப்.,15ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளோடு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்வும்,இரவு 8 மணிக்கு சாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந்தருளுளி காட்சி தருகிறார்.
  • 3வது நாளான 16ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.சாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து, மீண்டும் கோவிலுக்கு வரும் நிகழ்வும் நடக்கிறது.
  • முக்கிய நிகழ்ச்சியான பிப்.,22ந்தேதி காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
  • விழாவின்10வது நாள்அன்று மாசி அமாவாசையை முன்னிட்டு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற உள்ளது.
  • இதையொட்டி வருகிற 16ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு வரையிலும் சாத்தப்பட்டிருக்கும்.

இவ்வேளையில் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசனம் செய்யவோ,22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதி கிடையாது என்ற தகவலை திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha