சபரிமலையில் அமலான புதிய திட்டம்- பக்தர்கள் மகிழ்ச்சி..!

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 … Read more

பக்தர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் முறிந்து விழுந்த 40 டன் எடை கொண்ட கொடிக்கம்பம்..!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரத்தை அகற்ற முயன்ற போது விபரீதம்.  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு முன்பு 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரம் … Read more

மக்களே இங்கு செல்லாதீர்கள்….இரண்டு நாட்கள் தடை!

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் … Read more

#பக்தர்கள் உஷார் – தேவஸ்தானம் அறிவிப்பு

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும் பக்தர்கள் உஷாராக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு மூலமாக பக்தர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் இதற்காகவே  tirupathibalaji.ap.gov.in  என்ற இணையதளத்தை தேவஸ்தானம்  ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள்  போன்ற சேவைகளையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிய … Read more

2ம்படை வீட்டில் துவங்குகிறது…பங்குனி திருவிழா..பக்தர்களுக்கு தடை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனிப் திருவிழாவை ஆகம விதிப்படியே கோயிலுக்குள்ளேயே கொண்டாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  வருடாவருடம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி திருவிழா நடப்பாண்டிற்கான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா, கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்த்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ம் தேதி … Read more

நிம்மதி தரும் நீராடல்…பக்தர்களால் நிறைந்த தெப்பம்..தீர்த்தவாரி கும்பகோணத்தில் வெகுசிறப்பு

கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும்  வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின்  மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட … Read more

23 ஆண்டு கழித்து குடமுழுக்கு காணும் தஞ்சை…படையெடுக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கோலகலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் காணப்படும் தஞ்சை பெரியகோவில் 23 ஆண்டுகழித்து இன்று குடமுழுக்கு தஞ்சை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி அம்மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது. 23 ஆண்டு கழித்து குடமுழுக்கு நடைபெறுவதால் இந்த விழாவில் கலந்து கொள்ள சுமார் 5 முதல் 7 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை … Read more