#பக்தர்கள் உஷார் – தேவஸ்தானம் அறிவிப்பு

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும் பக்தர்கள் உஷாராக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு மூலமாக பக்தர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் இதற்காகவே  tirupathibalaji.ap.gov.in  என்ற இணையதளத்தை தேவஸ்தானம்  ஏற்படுத்தியுள்ளது. இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள்  போன்ற சேவைகளையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிய … Read more

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் விதித்து தேவஸ்தான தலைவர் நடவடிக்கை…

தற்போது வேகமாக பர்வி வரும் கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த  வைரஸ் முற்றிலும் ஒழிக்க பக்தர்கள் சாமியை வேண்டிக் கொள்ள வேண்டும் என திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.  மேலும், அவர் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்று தெரியவில்லை. மத்திய … Read more

திருப்பதி லட்டு ரத்து.! அறிவித்தது தேவஸ்தானம்

திருப்பதில் தினசரி,வாராந்திய சேவைகளில் வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம்   ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் பிரசாதம் ஆனது வழங்கப்பட்டு வருகிறது.இந்த பிரசாதம்ஆனது வருகின்ற மே மாதம் முதல் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில்ன் தினசரி, வாராந்திர சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு  தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.