ராமர் சிலைக்கு 15 கிலோ தங்கம்,18,000 வைரங்கள், மரகதங்கள் அலங்கரிப்பு.!

Ram Lalla

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளாமானோர் நேற்று அயோத்தியில் ராமரை பார்க்க குவிந்தனர். பெரும் சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில், இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,  நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் … Read more

அயோத்தி ஹனுமன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

Hanuman Garhi Temple

உலக முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மட்டுமின்றி இந்துக்களுக்கு மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் அமைந்தது. 500 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது என மக்கள் மகிச்சியில் உள்ளனர். வனவாசம் சென்ற ராமர் பல காலங்களுக்கு பிறகு மீண்டும் அயோத்திக்கு வந்துவிட்டார் என பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

சபரிமலையில் அமலான புதிய திட்டம்- பக்தர்கள் மகிழ்ச்சி..!

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 … Read more

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள். சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த  தரிசன நேரம் 17 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு … Read more

#Breaking:நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை!

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி தைப்பூச திருவிழா!

திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி … Read more

திருச்செந்தூர் கோவிலில் இந்த நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக,அதன் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி,காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலில் … Read more

திருவண்ணாமலை கிரிவலம் – 20,000 பக்தர்களுக்கு அனுமதி!

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 15,000 வெளியூர் பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு  மலையில் ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் தடையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் … Read more

#Breaking:பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் எதற்கு? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் … Read more

கர்நாடகாவில் 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு ..!

கர்நாடகாவில் 211 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த ஒரு அரசு மத அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், எங்கள் இந்து கலாச்சார மதிக்கும் ஆடைகளை பின்பற்றுமாறு பக்தர்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சேலை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அது அவர்களது உடலை சரியாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும். ஆண்களுக்கும் நாங்கள் … Read more