குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  குஜராத் சட்டமன்ற தேர்தல்  மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. … Read more

பஞ்சாபில் இன்று உச்சகட்ட பரபரப்பு.! ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி ஆயத்தம்.!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக … Read more

இமாச்சல பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர்…!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் பாஜகவில் இணைந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் உள்ளிட்ட மூவரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கடந்த மாதம், … Read more

சற்று நேரத்தில்…பஞ்சாப் மாநில புதிய அமைச்சரவை பதவியேற்பு!

முன்னதாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட்,கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வெற்றி: இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார். ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்: இதனையடுத்து,தேர்தல் … Read more

இன்று ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்!

உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் ஆக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில்,பஞ்சாப் தவிர நான்கு இடங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம்,பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மார்ச்  16-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் … Read more

வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் – கமலஹாசன்

பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக வரும்  16-ஆம் தேதி பதவியேற்கிறார். அவர் கூறியபடி பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க … Read more

பஞ்சாப் முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மான்..!

பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே … Read more

#Breaking:”ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் இவர்தான்” – அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு!

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.மேலும்,தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்,ஒரு விழா நடைபெறுவதையொட்டி,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே … Read more

அருமை…”இளைஞர்களுக்கு அரசு வேலை…வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!

கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM … Read more

Breaking:ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு..!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக(National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக (National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல,கட்சியின் செயலாளராக பங்கஜ் குப்தா மற்றும் பொருளாளராக என்.டி.குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.