பஞ்சாபில் இன்று உச்சகட்ட பரபரப்பு.! ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி ஆயத்தம்.!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து, இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி ஆம் ஆத்மி பெருபான்மையை நிரூபிப்பேன் என பஞ்சாப் முதல்வர்  பகவந்த் மான் கூறியிருந்தார். அதன்படி இன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் பஞ்சாப் முதல்வர்  பகவந்த் மான்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment