பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து 56 லட்சம் பறித்த நபர்!மீண்டும் பொள்ளாச்சியில் நடந்த துயரம்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் அவருக்கு திருமணம் ஆகி கடந்த 9 ஆண்டுகள் ஆகியதாகவும் அவரும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் தற்போது அவர் சென்னையில் உள்ள கிண்டியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றும் கிசோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

வேலூர் தொகுதி வேட்புமனுத் தாக்கல் நிறைவு – இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல்!

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் இன்று மாலை 3  மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது.  இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தலில் வேலூரில் மட்டும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெரும் என்று தலைமை தேர்தலை ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 … Read more

சென்னை மசாஜ் பார்லரில் கல்லூரி மாணவர்கள் செய்த செயல்!கையை உடைத்து கைது செய்த காவல்துறையினர்!

சென்னையில் உள்ள நீலாங்கரை அடுத்த வேட்டுவங்கேனி பகுதியில் தனியார் மசாஜ் பார்லர் ஒன்று இயங்கி வருகிறது.அந்த பார்லருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் அந்த பார்லரில் மசாஜ் செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சில இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.அந்த வீடியோவை காட்டி பார்லர் உரிமையாளரிடம் பணம் பறித்து வந்துள்ளனர். இதே மாதிரி இவர்கள் வேறு சில பார்லர்கலீல் வீடியோ எடுத்து அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.இது குறித்து புகார் தெரிவிக்க அச்சத்தில் உரிமையாளர்கள் இருந்துள்ளனர். … Read more

BREAKING : “அத்திவரதரை” தரிசிக்க சென்று பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருக்கும் காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகானோர் சாமியை தரிசிக்க வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில்,ஏற்கனவே 2 … Read more

நான் தம் அடிச்சா உங்களுக்கு என்ன?பொங்கி எழுந்த பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வளம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங் ஆவார்.இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராகார்ஜுனா நடிக்கும் மன்மதடு 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.அதில் ரகுல் ப்ரீத் சிங் தம் அடிப்பது போன்ற காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இதனை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சி … Read more

என் துயருக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி – நடிகர் விவேக் ட்விட்!

“என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி” என்று கூறி ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்கள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். திரையுலகத்தில் முன்னணி நடிகராகவும் சமூக செயல்பாடுகளிலில் முன்னின்று இருக்கும் நடிகர் விவேக் அவர்களின் தயார் மணியம்மாள் (89) அவர்கள் நேற்று காலமானார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடந்தது. அவர் தம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , கவிப்பேரரசு வைரமுத்து , மதிமுக … Read more

வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த பெண்!மகளின் காதலனை வெட்டிய தந்தை!

சென்னையில் உள்ள அம்பத்தூர் அத்திபட்டி கலைவாணர் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ்.இவர் அம்பத்தூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும் அயப்பாக்கம் குடியிருப்பை சேர்ந்த சட்ட கல்லூரி 2-ம் வருடம் பயிலும் மாணவி சத்ய பிரியா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு தற்போது அது காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து சத்யபிரியா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே வந்து லாரன்ஸ் … Read more

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த … Read more

2021 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் தொடக்கம்!

நாட்டில் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் துவங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், 10 வருடங்கள் கழித்து வரும் 2021 ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் முன்னதாக மாதிரி … Read more

“ஆசிரியருடன் ஒரு செல்ஃபி” சேலஞ் தொடங்கி வைத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் !

“SELFIE WITH GURU” ( ஆசிரியருடன் ஒரு செல்ஃபி ) என்னும் ஹேஸ்டேக் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.   குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் உடன் இருக்குமாறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் பல்வேரு தரப்பினரரும் தங்கள் மாணவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து முகநூல் மற்றும் … Read more