வேலூர் தொகுதி வேட்புமனுத் தாக்கல் நிறைவு – இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல்!

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் இன்று மாலை 3  மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது.  இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தலில் வேலூரில் மட்டும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெரும் என்று தலைமை தேர்தலை ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 ம் தேதி முதல் ஜூலை 18 ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய காலஅவகாசம் தரப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல்  நிறைவு பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறும். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 50 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.