நீரவ் மோடி விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்.! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி.!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த … Read more

அதிர்ச்சி சம்பவம்..!கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியரை வேலைக்கு வர கட்டாயப்படுத்திய பிரபல வங்கி..!

ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியானது,கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஊழியரை வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின்,போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார் என்பவர்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால்,கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும்,அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.அதனால்,மெடிக்கல் லீவ் வேண்டுமென்று … Read more

தோண்டப்பட்ட நகைகளில் லலிதா ஜுவல்லரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கும் சொந்தமானவை-போலீஸ்..!

கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் நேஷனல் வங்கியின் சுவற்றில் துளையிட்டு 470 சவரன் நகைகளையும் , 17 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என தெரியாமல் 9 மாதங்களாக போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள லலிதா ஜூவல்லரி சுவரை துளையிட்டு தங்க நகைகளை ஒரு கும்பல் … Read more

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை..! 10 மாதத்திற்கு பிறகு 1.75 கிலோ நகைகள் மீட்பு..!

திருச்சி சத்திரம் பேருந்து அருகே கடந்த 2-ம் தேதி வரை உள்ள லலிதா ஜுவல்லரியில்  தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் , சுரேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த கணேசன் ஆகிய கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் , சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்சி போலீசார் நீதிமன்றம் உத்தரவு பெற்று சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருவாரூர் முருகனிடம் … Read more

பொது துறை வங்கிகள் 27இல் இருந்து 12ஆக குறைக்கப்பட உள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி –  யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் … Read more

"ரூபாய் 637,00,00,000 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்" நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி..!!

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு சொந்தமான வெளிநாடுகளில் உள்ள 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் 14,356 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் குடும்பத்தினருடன் பதுங்கியிருக்கும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, Interpol எனப்படும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் … Read more

“ரூபாய் 1,700,00,00,000 கடன் வாங்கி மோசடி” CBI வழக்குப்பதிவு..!!

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து ரூ.1,700 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த வி.எம்.சி நிறுவனத்தின் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் வி.எம்.சி என்ற நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ இந்த நடவடிக்கையை கையாண்டுள்ளது. இந்த புகாரில் ஹைதராபாத் வி.எம்.சி நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 593 … Read more