மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக எம்பி கனிமொழி!

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் உள்ள … Read more

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம்…! திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி…!

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் அவர்களது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  கடந்த 2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  போராட்டம் நடைபெற்றது.  பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினரால், 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எதற்கும் மின்சாரம் வழங்கக் கூடாது- கனிமொழி..!

சமீபத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய  அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனால், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக … Read more

#Elections2021: அதிமுக அமைச்சருக்கு நன்றி கூறிய திமுக எம்.பி. கனிமொழி!

திமுக எம்.பி. கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் … Read more

பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் முதல்வர்.., கனிமொழி எம்.பி பேச்சு..!

பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி என கனிமொழி கூறினார்.  திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்களை அதிகமாக துன்புறுத்தியவர்தான் அதிமுக சார்பில் கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிடுகிறார். வேலை வாய்ப்பு இல்லாத 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி என கூறினார். மக்களை முட்டாள் என நினைக்கும் அனைவரும் முட்டாள் … Read more

கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் – கனிமொழி எம்பி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ஜனநாயக வழியில் வந்திருக்க கூடிய ஒரு இயக்கம் திமுக. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கலைஞர் நிற்பதாக எண்ணி அனைவரும் பாடுபட வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் பின்னணியில் உள்ள அதிமுகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க போகிறோம் என்று … Read more

அதிமுகதான் பாஜகவின் “பி” டீம் – கனிமொழி விமர்சனம்..!

மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாக இருந்துள்ளது. அதேபோல தான் வங்கி கடன் அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும். திமுகவில் கூட்டணி தொடரும். மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் எடுப்பார் என  கூறினார். அப்போது, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு … Read more

திமுக எம்.பி கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம்!

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை ஆர்.டி.ராகவையார் மகாலில் அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளை காலை 9 மணிக்கு பின் சந்திக்க உள்ள கனிமொழி, 10 மணிக்கு ஜீவாநகர் செல்ல உள்ளதாகவும் அதன் பின் அப்பள தொழிற்சாலைகளில் பணி புரிய கூடிய பெண் தொழிலாளர்களுடன் உரையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

‘உதயசூரியன் உதிக்கும் வரை கனவு காணுங்கள் – கனிமொழி’., “கடைசி வரை கனவு மட்டுமே – அதிமுக”

கனவு காண்பதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு என்ற கனிமொழி கருத்திற்கு, கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு என்று அதிமுக பதில். நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. முக ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி, வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். அடுத்த … Read more

வெற்று அறிக்கை நாயகன் பட்டத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி – அதிமுக கழகம்

மு.க.ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி என கூறிய கனிமொழிக்கு, பதில் கருத்து தெரிவித்துள்ளது அதிமுக. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விமர்சிக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி முக ஸ்டாலின் சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி என்றும் வாழ்த்துக்கள் எனவும் … Read more