பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் முதல்வர்.., கனிமொழி எம்.பி பேச்சு..!

பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி என கனிமொழி கூறினார். 

திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்களை அதிகமாக துன்புறுத்தியவர்தான் அதிமுக சார்பில் கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிடுகிறார். வேலை வாய்ப்பு இல்லாத 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி என கூறினார்.

மக்களை முட்டாள் என நினைக்கும் அனைவரும் முட்டாள் ஆக்கப்படுவார்கள். இதை முதல்வர் எடப்பாடி புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவந்தவர் முதல்வர் எடப்பாடி என கனிமொழி எம்.பி தெரிவித்தார். மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என தெரிவித்தார்.

author avatar
murugan