#JustNow: இவர்களுக்கான திருமண உதவித்தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித் தொகையினை 3 ஆயிரமாக உயர்வு. பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் அவர்கள், 2021-22-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் … Read more

டெல்லி : இந்து மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் …!

டெல்லியில் உள்ள இருவேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக இரண்டு எப்.ஐ.ஆர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புராரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்தின் போது ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் பொருளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பத்திரிக்கையாளர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, டெல்லி காவல்துறை ஆன்லைன் பணிபுரியும் பத்திரிகையாளர்களை தாக்கிய நபர்கள் மீது, பாலியல் துன்புறுத்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பறிக்க முயற்சி செய்தல் … Read more

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை வெளியீடு. தமிழகத்தில் செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம், தற்போது ரூ.72,000 ஆக உள்ளது. பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசால் … Read more

#NationalPressDay:பத்திரிகையாளர்களுக்கு…முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இனிப்பான வாழ்த்து!

சென்னை:தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு,இன்றைய நாள் துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாளாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் நான்காவது தூண் என ஊடகங்கள் அழைக்கப்படும் நிலையில்,சட்டப்பூர்வ மற்றும் அரை-நீதித்துறை நிறுவனமான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி “தேசிய பத்திரிகை தினம்” அனுசரிக்கப்படுகிறது.இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கிறது. இந்நிலையில்,நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் ..!

ஆப்கானிஸ்தானில்  பத்திரிகையாளர்கள் 2 பேரை தாலிபான்கள் கொடூரமாக தாக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் தலிபான்கள் வைத்துள்ளனர். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வந்தனர். தாலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பி வருகிறார்கள். இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து காபூலில் பெண்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தை பதிவு செய்த … Read more

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் – மத்திய அரசு..!

கொரோனாவால் இறந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் உதவி வழங்க ரூ. 5.05 கோடியை அரசு அங்கீகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார். மக்களவையில் எம்.பி.ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பவார், … Read more

#Breaking:ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா உதவித்தொகை -திருமாவளவன் வலியுறுத்தல்..!

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,விசிக தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று,தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் … Read more

பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் – ஒடிசா முதல்வர்!

அங்கீகாரம் பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதிலும் தினமும் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஒடிசாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் 8 … Read more

கடினமான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்…! பதிலளிக்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் மீது சானிடைசரை ஊற்றிய பிரதமர்…!

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அவர்கள் மீது சனிடைசர் தெளித்த தாய்லாந்து பிரதமர். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், 2014-ம் ஆண்டு ராணுவ புரட்சியின் போது, கிளர்ச்சியை தூண்டியதாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவயை சேர்ந்த 3 மந்திரிகள் மீது அப்போது வழக்கு தொடரப்பட்டது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான … Read more

பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம் – அமைச்சர் ஜெயக்குமார்

பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம். இன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் உருவாகி வருகிற நிலையில், பத்திரிக்கையாளர்கள் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்,, இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஊடக துறையினருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டால், நிச்சயமாக பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக நாங்கள் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக ஜனநாயகத்தை மதித்து பத்திரிகையாளரை போற்றும் வகையில் செயல்படும் என்றும் கூறியுள்ளார்.