வைரலாகும் புதிய வீடியோ : அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! கண்கலங்கிய தாயார்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் .இதில், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார். அந்த வகையில், நேற்று திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இவர் திருச்சிக்கு வந்ததை அறிந்த  ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் அஜித்தை பார்க்க ரைபிள் கிளப்பிற்கு வந்துவிட்டனர். பிறகு … Read more

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் களமிறங்கிய அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் . துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார். இந்நிலையில், திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கவுள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் … Read more

#Breaking:சற்று முன்…விசிக பிரமுகர் வீடு உட்பட 50 இடங்களில் ரெய்டு!

திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை … Read more

வங்கி ஊழியரை காரில் கடத்தி 12 லட்சம் கொள்ளை.! மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தாத்தையங்கார் பேட்டை என்ற தா.பேட்டை பகுதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்டார். குழந்தையில்லை. இவர் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனியாக தா.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமியை மர்ம நபர்கள், காரில் கடத்தி, இரவு முழுவதும் வீட்டு சாவியை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது … Read more

லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் – தமிழ்நாடு டிஜிபி

லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு. காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்நிலை மரணத்தை தடுப்பது குறித்து மத்திய மண்டல போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். காவல்நிலைய மரணங்கள் கூடாது, போலீஸ் வன்முறையை கையாள கூடாது என முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தேவைப்படும் போது பலத்தை போலீஸ் பயன்படுத்தலாம், குற்றவாளிகள் போலீசை … Read more

#JustNow: நிவாரண நிதி உயர்வு – வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!

திருச்சியில் வணிகர் சங்க மாநாட்டில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வணிகர்களுக்கான சலுகைகளை அறிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தையொட்டி இன்று திருச்சியில் நடைபெற்று வணிகர் விடியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி முதல்வர், வணிகர்களுக்கான சலுகைகளையும் அறிவித்தார். அதில், வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக … Read more

மே 15 முதல் கோலாலம்பூருக்கு தினசரி விமானம்! – இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் … Read more

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

திருச்சி:பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் … Read more

திருச்சியில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள் ஒப்படைப்பு..!

இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. திருச்சி திருவெறும்பூர் அருகே படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி கடற்படை, கடலோர  காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கப்பல்களில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய நவீன இயந்திர துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் தெர்மல் இமேஜர் ஃபைண்டர் போன்ற நவீன வசதிகள் உள்ளன.

சானிடைசர் பாட்டில் வெடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!

திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இ.பி ரோடு, விறகுப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் 13 வயது ஸ்ரீராம். இந்த சிறுவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட எண்ணியுள்ளார். அதனால் முருகேசன் என்பவர் வீட்டிற்கு முன்னால் கற்களை அடுக்கி வைத்து … Read more