தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் . துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கவுள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்ளும் அஜித் இதில் வெற்றிபெற்று தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.