கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் அடுத்த சாட்டை!

நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். பொதுவாக இவர் இயக்கம் படங்கள் அனைத்தும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறுவதாக உள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாட்டை பணமானது பள்ளிகளில் பொறுப்பற்ற ஆசிரியர்களின் செயலை விளக்கும் வண்ணம் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த சாட்டை படமானது, கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இதனை … Read more

இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்! இயக்குனர் சமுத்திரக்கனி வருத்தம்!

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், நகைசுவை நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில், இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் குறித்து பேசியுள்ளார். இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்.’ என பதிவிட்டுள்ளார். … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா திரையுலகில் இயக்குனராக வளம் வரும் சமுத்திரக்கனி அவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றி வருகிறார். மதுரை செல்லூரில், சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், வாக்காளர்களாகிய நீங்கள் வெங்கடேசனை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். வாக்களித்து வெறி பெற வைத்தால், மிகப்பெரிய மாற்றத்தை அவர் கொண்டு வருவார். இதனால் அடுத்த தலைமுறை வளரும் என இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் பெட்டிக்கடை….!!!

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை மையமாக வைத்து தான் அமைகிறது. இந்நிலையில், தற்போது நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியாகி உள்ள பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், வழக்கம் போல் 10 நமிடம் … Read more

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாக மிரட்ட வருகிறார் ‘குணா’ சமுத்திரகனி!! வடசென்னை-2 அப்டேட்ஸ்!!!

தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல முதல் பாக முடிவில் இரண்டாம் பாகத்திற்காக அன்புவின் எழுச்சி அடுத்த பாகத்தில் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என மூன்று பேருக்கும் சமமான ரோல்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த … Read more

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 ரிலீஸ் அப்டேட்!!!

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நாடோடிகள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நட்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட்டது. ஆதலால் இந்த படத்திற்கு தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்தது. இந்நிலையில் தற்போது, இப்படத்ததின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் இயக்குனர் சமுத்திரகனி, நடிகர் சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்பட ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் இப்பட ரிலீஸ் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரியில் … Read more

நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிய சமுத்திரகனியின் 'சில்லு கருப்பட்டி' பட டீசர் இதோ!!!

சமூகதிற்கு நல்ல கருத்துள்ள படங்களை இயக்கியும், நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தும் தமிழ் சினிமாவில் நல்ல மனிதராக வலம் வருபவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி. இந்த படத்தை பூவரசம் பீப்பி படத்தை எடுத்த ஹலிதா சமீம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பரஹம்ஷா, அபிநந்தன், ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்தி என நான்கு  பேர் இந்த படத்தில் பணியாற்றுள்ளனர். இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, … Read more

எஸ் எஸ் ராஜமௌலியுடன் இணையும் சமுத்திரகனி..!!RRR அப்டேட்…!

பாகுபலி பிரம்மாண்டத்திற்கு பிறகு சிரஞ்சீவி மகன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை கொண்டு தற்போது இயக்கி வருகிறார்.இந்த கூட்டணியின்  படப்பிடிப்பு  கடந்த நவம்பர் 19ம் தேதி தொடங்கியது. ஆனால் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற தலைப்போடு  இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் பெயரில் வரும் முதல் எழுத்தைச் சேர்த்து இப்படி அழைத்து வருகின்றனர். மேலும் ராம ராவண ராஜ்யம்  என்ற தலைப்பு  இந்தப் … Read more

சமுத்திரகனி கிளாப் அடித்து சீறிப்பாய தொடங்கியது கொம்பு வச்ச சிங்கம்!

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் சில  வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து நல்ல வெற்றியடைந்த திரைப்படம் சுந்தர பாண்டியன். இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை S.R.பிரபாகர் இயக்கி இருந்தார். தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. S.R.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. இதன் முதல் … Read more

"குட் டச், பேட் டச்" 'ரொம்பவே யதார்த்தமான படம் நடிகர்கள் கருத்து…!!

கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது என்று ‘ஆண் தேவதை’ படம் குறித்து நடிகர் சத்யராஜும், இயக்குநர்கள் பா.இரஞ்சித்தும், அமீரும் பாராட்டியுள்ளனர். ‘ரெட்டச்சுழி’ படத்துக்குப் பிறகு தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய் மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் … Read more