இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்! இயக்குனர் சமுத்திரக்கனி வருத்தம்!

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், நகைசுவை நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில், இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.