#BREAKING: அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம்!

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம். அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை … Read more

முலாயம் சிங் பிறந்த ஊரில் நாளை அவரது இறுதி அஞ்சலி.! வெளியான அதிகாரபூர்வ் தகவல்.!

முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் நாளை (11.10.2022) மாலை 3மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெறும் என சமாஜ்வாதி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது … Read more

#BREAKING: முலாயம் சிங் யாதவ் மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர் என  பிரதமர் மோடி ட்வீட். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு … Read more

#BREAKING: உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் … Read more

#Breaking:காங்.கட்சி மூத்த தலைவர் கபில் சிபல் திடீர் விலகல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கபில் சிபல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே,காங்கிரஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று கபில் கூறியிருந்த நிலையில்,தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து,கபில் சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியின் … Read more

வீட்டு வாயிலிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்ட அகிலேஷ் யாதவ்…!

தர்ணா போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில்  நடந்த நிகழ்ச்சி பங்கேற்க  அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக  சென்ற பாஜகவினரின் வாகன அணிவகுப்பு … Read more

கட்சி சின்னத்தில் யூடியூப் சேனல் தொடக்கிய சமாஜ்வாதி கட்சி ..!

சமாஜ்வாதி கட்சி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில்  மக்களை எளிதாக சென்றடையும் வகையில் சமாஜ்வாதி கட்சி தங்கள் கட்சி சின்னமான சைக்கிளின் பெயரிலேயே ‘பைசைக்கிள் டிவி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஆகஸ்ட் 15 அன்று சைக்கிள் டிவியை (யூடியூபில்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போதுவரை சேனலைக் கையாளும் கட்சியின் ஊடகக் குழு 5 வீடியோகளை பதிவேற்றியுள்ளது. “இந்த சேனலில் கட்சியின் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை பரப்புதல், முந்தைய … Read more

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிப்பு

சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். அதேபோல் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி … Read more