#BREAKING: அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம்!

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.

அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சைபாய் கிராமத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக சார்பில் டிஆர் பாலு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment