#BREAKING: சென்னையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை..!

சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், க்ரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் 3 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை … Read more

சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல் – சென்னை கிரீம்ஸ் சாலையில் பரபரப்பு!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பலால் பரபரப்பு நிலவியுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடி, எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று இன்று சூறையாடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென வேகமாக புகுந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடியதுடன், அங்கிருந்தவர்களை தாக்கி கடையை அடித்து நொருக்கியுள்ளனர். எதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

வங்கியிலிருந்த 20 லட்சம் பணத்தை அசராமல் ஆட்டையை போட்ட 11 வயது சிறுவன்!

வங்கியிலிருந்த 20 லட்சம் பணத்தை கொஞ்சமும் அசராமல் ஆட்டையை போட்ட 11 வயது சிறுவனின் செயல் சிசிடிவியில் சிக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் எனும் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை வங்கியில் தற்பொழுது ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சாதாரணமாக நுழையும் சிறுவன் கிட்டத்தட்ட 20 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து தான் எடுத்து சென்ற பையில் எடுத்து வைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியிலிருந்த வங்கி காவலர்களை தாண்டி சாதாரணமாக … Read more

கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்து சென்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கைவரிசை!

நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். நாகையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, சம்பந்தன் மற்றும் ராமகண்ணு ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஐந்து அதிவேக படகுகளில் வந்த … Read more

சென்னையில் தொழிலதிபரை கடத்தி 2 கோடி கொள்ளை! கொள்ளையர்கள் குடும்பத்துடன் கைது!

சென்னையில் திவான் எனும் தொழிலதிபரை கடத்திய கொள்ளையன் மற்றும் கூட்டாளி கைது. சென்னையில் மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர் என்பவர் கடந்த 17 ஆம் தேதி கடத்தப்பட்டதாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் தவ்பீக் என்பவருக்கும் திவான் அக்பருக்கும் இடையே ஹவாலா பணப் பரிமாற்ற தொழில் போட்டி நீண்ட காலமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனையில், தவ்பீக் அவரது மனைவி மற்றும் 5 கூட்டாளிகள் தங்களை என்ஐஏ அதிகாரிகள் … Read more

காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 பட பாணியில் ரயில் கொள்ளை!

காசியாபாத்தில் ஹ்ருத்திக் ரோஷனின் தூம் 2 படத்தால் ஈர்க்கப்பட்டு, ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய இந்திய திரைப்படம் ஆகிய தூம் 2 எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள கிருத்திக் ரோஷன் திருடன் மற்றும் மாறுவேட கொள்ளைகளில் ஈடுபட்டு ஹீரோவாக நடித்து இருப்பார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த காசியாபாத்தை சேர்ந்த ரகு கோஸ்லா என்பவர் அவரைப்போலவே தற்பொழுது ரயில் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச … Read more

5,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.!

சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதில் வாடகைக்கு வசித்து வருபவர் முகமது முகமது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முகமது இரவு 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அப்பொழுதே இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் அதிலிருந்த இருந்த இரண்டு எடை மிஷின்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் 3000 ரூபாய் பணத்தையும் விட்டு வைக்காமல் … Read more

கோவில் உண்டியலை உடைத்து நாகர்கோவிலில் திருட்டு – மர்ம நபரை தேடும் பணியில் போலீசார்!

நாகர்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வெட்காளியம்மன் எனும் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து கோவிலை திறந்த போது அங்கு முன் பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். … Read more

அரியாங்குப்பத்தில் 13 சவரன் நகைகள் திருட்டு..!

அரியாங்குப்பத்தில் 13 சவரன் நகைகள் திருட்டு. அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் இவர் அங்கு ஓட்டல் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுபாஷினி சுபாஷினி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் சுபாஷிணி தனது வீட்டை பூட்டி தனது மருமகள் விஜயலட்சுமி உடன் சொந்த வேலைக்காக முதலியார்பேட்டை க்கு சென்றுள்ளார். மேலும் அப்பொழுது வேலை முடிந்து சற்று நேரம் கழித்து வீட்டிற்கு … Read more