சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பல் – சென்னை கிரீம்ஸ் சாலையில் பரபரப்பு!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய கும்பலால் பரபரப்பு நிலவியுள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடி, எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய கிரீம்ஸ் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று இன்று சூறையாடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென வேகமாக புகுந்த 50க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடியதுடன், அங்கிருந்தவர்களை தாக்கி கடையை அடித்து நொருக்கியுள்ளனர். எதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையை அடித்து நொறுக்கிய கும்பலை கைது செய்துள்ளனர். பரபரப்பான சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Rebekal