#BREAKINGNEWS : 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு  ( Louise Glück) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.