ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்…!

ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல். தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் … Read more

#Breaking:ஏடிஎம் கொள்ளை;ஒப்புதல் வாக்குமூலம் -மேலும் ஒருவர் கைது…!

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அமீர் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்,அவரது நண்பர் வீரேந்தரை போலீசார் டெல்லியில் இன்று கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள  தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளனர். கடந்த … Read more

ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்தவர் கொலை – 4 பேர் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் இயங்கி வரும் ஏ.டி.எம் மிஷினில் இரவு ஒரு மணி அளவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஏ.டி.எம்மை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அருகில் வசித்தவர்கள் சத்தம் கேட்டதால் எழுந்து வந்து அவர்களை பிடிக்க முயன்ற … Read more

கைதான கொள்ளையர்களை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலக கொள்ளை வழக்கில் கைதான 7 பேரை காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், 10 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஓசூரில் கடந்த 22-ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் … Read more

18 மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டு – முதல்வர் ட்வீட்

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த தமிழக காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு. ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்த 6 பேரை ஐதராபாத் சம்சாத்பூர் அருகே கைது செய்யப்பட்டனர். கைதான 6 பேரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 25 கிலோ தங்கம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கொள்ளையர்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் … Read more

துப்பாக்கி முனையில் கொள்ளை – வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளையில் ஈடுபட குற்றவாளிகளை ஐதராபாத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று காலை ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டன. பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் … Read more

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது – முத்தூட் நிறுவனம்.!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.7 கோடி தங்க நகைகள் கொள்ளை தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டது. அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. பாகலூர் சாலையில் … Read more

#BREAKING: துப்பாக்கியை காட்டி மிரட்டி முத்தூட் அலுவலத்தில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை.!

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளை அடித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர். அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாகலூர் சாலையில் உள்ள … Read more

இனிமேல் டெலிவரி ஊழியராக இந்த சான்றிதழ் அவசியம்!

இனிமேல் டெலிவரி ஊழியராக இந்த சான்றிதழ் அவசியம். கடந்த வாரம், சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் 68 புல்லட்டுகளை திருடிய கும்பல் பொலிஸாரின் கைவசம் சிக்கியது. இந்த திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பல், போலிஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்க , ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல செயல்பட்டு, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.  சமீபத்தில்,திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் பல டெலிவரி ஊழியர்கள் சிக்கியுள்ளனர். உணவை கொண்டு செல்வது போல, போதை பொருட்களையும் … Read more

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை. சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். மொத்த வியாபாரம் செய்யும் நகை கடையில், பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நாகர்களை கொள்ளையர்கள் திருடி உள்ளனர். நகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் … Read more