#BREAKING: துப்பாக்கியை காட்டி மிரட்டி முத்தூட் அலுவலத்தில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை.!

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளை அடித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர். அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாகலூர் சாலையில் உள்ள … Read more

மாமியார் வீட்டிலிருந்து ரொக்கம் மற்றும் நகைகளுடன் புதுமணப்பெண் ஓட்டம்.!

உத்தரப்பிரதேசம்: புதிதாக திருமணமான மணப்பெண் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து ரூ.70,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் ஓடிவிட்டதாக காவல் துறையிடம் கணவர் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஷாம்லி மாவட்ட போலீசார் ரூ .70,000 மற்றும் குறிப்பிடப்படாத தொகை மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் எடுத்துச் சென்றார்,  பாக்பாத்தில் உள்ள கிராமத்தில் மணப்பெண் பற்றி விசாரித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவெடிக்கை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.