கோவில் உண்டியலை உடைத்து நாகர்கோவிலில் திருட்டு – மர்ம நபரை தேடும் பணியில் போலீசார்!

நாகர்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வெட்காளியம்மன் எனும் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து கோவிலை திறந்த போது அங்கு முன் பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். … Read more

முக கவசம் அணிந்து வந்து சூப்பர் மார்கெட் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்!

சென்னை அயனாவரம் பகுதியில் நின்றுகொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை முகக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் ஓனரை முகக்கவசம் அணிந்து கையில் அரிவாளுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் வெட்டியுள்ளார். அருகில் நின்ற இளைஞர் ஓடி வந்து காக்கவே சூப்பர் மார்க்கெட் ஓனர் தலையில் அரிவாள் வெட்டுடன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில், வந்தவர் குறைந்த வயதுடைய இளைஞர் … Read more

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கவிதா. கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது, வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகை, 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் … Read more