ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை! மீறினால் 10 லட்சம் அபாரம், 3 ஆண்டுகள் சிறை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, … Read more

BIGG BOSS 5 : நிரூப்புக்கு உதவியாளராக இருக்கமாட்டேன், தண்டனை வேண்டுமானால் கொடுங்கள்…!

நிலத்தின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள நிரூப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அக்ஷராவை உதவியாளராக வைத்துக்கொள்ள விரும்புகிறார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பஞ்ச பூதங்கள் டாஸ்கில்  நிலத்தில் ஆற்றல் கொண்ட நாணயத்தை நிரூப் கைப்பற்றியுள்ளார். கடந்த வாரம் நெருப்பின் ஆற்றல் கொண்ட நாணயத்தை கைப்பற்றிய இசைவாணிக்கு ஆளுமை வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிரூப்பிற்கு ஆளுமை வழங்கப்பட்டு உள்ளது. வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை உதவியாளராக எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிரூப் உதவியாளராக … Read more

இத்தனை நாள் நாம் தண்டனை என நினைத்துக்கொண்டிருந்த தோப்புக்கரணத்தால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

தண்டனையாக கருதப்படக்கூடிய தோப்புக்கரணம் நமது முன்னோர்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த தோப்புக் கரணத்தை நாள்தோறும் போடுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தோப்புக்கரணத்தின் நன்மைகள் தோப்புக்கரணம் போடுவது என்றாலே பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனையாக தான் தற்போதெல்லாம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவதால் நமது வலது கைவிரல்கள் இடது கைவிரல்கள் வலது காது மடல்கள் ஆகியவற்றை பிடித்து உட்கார்ந்துகொண்டு எழுகிறோம். தோப்புகரணம் போடும் பொழுது நமது மூளையில் உள்ள நரம்புகள் … Read more

ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனை!

தொற்றை தடுப்பதற்காக ஜப்பான் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரசும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக ஜப்பானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் அங்கு தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை … Read more

மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை!

மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இதனை மக்கள் கடைபிடிப்பது இல்லை. … Read more

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கி சூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம் – வழக்கறிஞர் ஹவ்ஸ்

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கிசூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு … Read more

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அரசு ஊழியர்கள்! கடுமையான நடவடிக்கை தேவை

கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அலையும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் எடுத்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இ – பாஸ் எடுப்பதற்கு … Read more

மனைவியின் தவறான நடத்தை! வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்! இணையத்தில் வைரலான வீடியோ!

மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம்  தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை … Read more

பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை. இதனையடுத்து, அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும், தனது நண்பர் ரவி … Read more

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய காவல்துறையினர். இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி பொதுமக்கள் பலரும் விதிகளை மீறி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் விதிகளை மீறி வெளியே சுற்றி திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதையும் மீறி … Read more