பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

Udhayanithi

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..! இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் அமைச்சர் உதயநிதி, குடியரசு தலைவர், ஆளுநரின் … Read more

சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

mkstalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் … Read more

மக்களுடன் முதல்வர்… சோதனை முறையில் திட்டத்தை தொடங்கியது தமிழக அரசு!

mk stalin

சென்னை மாநகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சோதனை அடிப்படையில் இன்று தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, Service delivery @ Door step என்பதை அடிப்படையாக கொண்ட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தின் சோதனை சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாமில் 10 துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். முகாமில் பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் … Read more

பல்கலை.க்கான அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு!

MUSIC COLLEGE

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவித்தார். இதன்பின் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட … Read more

பல்கலைக்கழக வேந்தர் பதவி.! ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin - Former Tamilnadu CM Jayalalitha

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை அளித்தார். மாநிலத்தில் முதல்வர் வேந்தராக பொறுப்பில் இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில், பிரபல திரைப்பட பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இசை கலைஞர் பி.எம்.சுந்தரம் அவருக்கும் … Read more

மேடையில் பி.சுசீலாவின் ரசிகராக மாறிய முதல்வர் மு.கஸ்டாலின்.! பாடல் பாடி அசத்தல்…

Susheela -CM Stalin

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் பட்டமளிப்பு விழா, இன்று காலை (21.11.2023) வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்ளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார். பட்டமளிப்பு … Read more

40 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்.! அப்பாவு கொடுத்த ஷாக்.! நிதானித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

TN Assembly speaker Appavu says about Tamilnadu CM MK Stalin

இன்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்தவை என பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களோபரமானது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுக ஆதரவை பின் வாங்கினர். அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். நெருங்கும் … Read more

தமிழகத்தில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

anti-terrorist unit

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் அமைக்கப்படும் புதிய தீவிரவாத தடுப்பு பிரிவில் 1 டிஐஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், … Read more

கடத்தப்பட்ட தமிழக மீனவர்.. மத்திய அமைச்சருக்கு லெட்டர் போட்ட முதல்வர் ஸ்டாலின்.!

mk stalin

ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவரவும், ஓமனில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த மீனவக் குழுவினரின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கவும், உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் … Read more

மீண்டும் கூடும் I.N.D.I.A தலைவர்கள்.. சென்னையில் முக்கிய விழா.. உ.பி முன்னாள் முதல்வர் வருகை.! 

DMK MP TR Balu - UP Ex CM Akilesh Yathav - Tamilnadu CM MK Stalin

1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. … Read more