வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை – கமல்ஹாசன்

வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் கடிதம். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள், ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய … Read more

தகுதி இல்லாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் – கமல்ஹாசன்

தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று என்று ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமஹாசன், தகுதி இல்லாதவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என்றும் ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டும் இருந்து செய்யும் விஷயமல்ல எனவும் பேசியுள்ளார்.  

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குற்றசாட்டு – தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுப்பு

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார். மே 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டைனர் லாரிகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, … Read more

“என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்” – கமீலா நாசர்

என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன் என கமீலா நாசர் அறிக்கை. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சென்னை மண்டலத்தில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்த நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் கட்சியில் இருந்து விலகுவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது. இன்று முதல் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்திருந்தன. இதுகுறித்து கமீலா நாசர் அறிக்கை … Read more

ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் – கமல்ஹாசன்

கொரோனா 2வது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது கொடுமை என கமல்ஹாசன் அறிக்கை. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் இல்லை. ரெம்டெசிவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா விரைவில் முதலிடம் … Read more

பிரதமர் மோடியை போலத்தான் கமல்ஹாசனும் – சுஹாசினி மணிரத்னம்

பிரதமர் மோடி எப்படி தனி ஆளாக இருக்கிறாரோ அதேபோன்று கமலும் இருப்பார் என சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கோவை தெற்கில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்‌ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் அத்தொகுதியில் நடனமாடி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகளையும் மக்களிடம் விநியோகித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சுஹாசினி மணிரத்னம், பிரதமர் … Read more

100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் – கமல்ஹாசன், ம.நீ.ம.

தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கல் ஆதரவாளர்களை ஆதரித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போட்டியிடும் மக்கள் நீதி … Read more

100% இந்த விருது ரஜினிக்கு பொருத்தம் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என ரஜினிக்கு, கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உயரிய விருதான தாதா … Read more

அவர்கள் ஒன்றும் சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் – ம.நீ .ம. கமல்ஹாசன்

அதிமுக, திமுக ஆகியவை சிங்கம், புலி அல்ல கொசுக்கள் தான் என்பதால் விரல்களால் நசுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இங்குள்ள மக்களின் ஏழ்மை, கொடுமை, சாக்கடை, குப்பையை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 5 வருடத்தில் இரண்டு வாரம் மட்டுமே குத்தைகை எடுத்து, ஜூஸை உறிஞ்சிவிட்டு சக்கையை போட்டு போய்டுவாங்க, அதனால் தான் சாக்கடை ஓடுகிறது, உங்களை கொசுக்கள் அடிக்கிறது என … Read more

சவாலை ஏற்கிறோம்.. முதலில் பிரதமருடன், கடைசில் வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் – ம.நீ.ம.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவாலை ஏற்றுக்கொள்கிறோம் என மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆதரித்து, நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பைக் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தபின் பேசிய அவர், கமல்ஹாசன், வானதி சீனிவாசன் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் தெரிவித்திருந்தார். மேலும், கொள்கைகள், தீர்வுகள், குறித்து விவாதித்தால் ஆட்சி செய்யும் நிர்வாகத் திறன் யாருக்கு உள்ளது … Read more