ஆதாயம் தரும் இரட்டை பதவி.! ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.!

ஆதாயம் தரும் இரட்டை பதவியில் ஆளுநர் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அண்மையில் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநராக இருப்பவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். … Read more

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலை திறப்பு.! ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.!

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது.   சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்கனவே,  … Read more

காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி.! தமிழக பிரதிநிதிகளை வழியனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.!

வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயிலை ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.  தமிழகத்துக்கும் காசிக்குமான கலாச்சார தொடர்பு , பண்டைய வரலாறு, கல்வி, பொருளாதரம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் இன்று (நவம்பர் 17) முதல் டிசம்பர் 16வரையில் வாரணாசியில், காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க சென்னையில் இருந்து தமிழக பிரதிநிதிகள் அடங்கிய ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து … Read more

ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு.!

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு … Read more

ஆளுநரை திரும்பபெரும் விவகாரம்.! திமுகவின் கடிதம் குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு.!

திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற கோரிய கடிதம் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழகத்தின் 15வது ஆளுநராக மேகாலயா, நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட காலதாமதம் ஆக்குகிறார் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி … Read more

இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.! வைகோ கடும் கண்டனம்.!

அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட … Read more

ஆளுநர் பதவி விலக வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை

பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக … Read more

ஆளுநர் மலிவான அரசியலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.! சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!

உயர் பதவியில் இருக்கும் ஆளுநர், பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டுவருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன். சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு … Read more

#Breaking:73-வது குடியரசு தினவிழா – தமிழகத்தில் முதல்முறையாக கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,குடியரசு … Read more

#TNAssembly:”மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்” – ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்!

சென்னை:மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும் என்ற தகவல் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்: “சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக  ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற … Read more