ஆளுநரை திரும்பபெரும் விவகாரம்.! திமுகவின் கடிதம் குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு.!

திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற கோரிய கடிதம் குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழகத்தின் 15வது ஆளுநராக மேகாலயா, நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட காலதாமதம் ஆக்குகிறார் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி இருந்தனர்.

தமிழக ஆளுநரை மாற்றக்கோரிய இந்த கடிதமானது இன்று குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment