பாரபட்சம் காட்டும் தேர்தல் ஆணையம்… ஐகோர்ட்டுக்கு சென்ற திமுக!

dmk

DMK: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகள் நிறைவு பெற்ற நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! தமிழக அரசுக்கு பறந்த புதிய உத்தரவு.!

Thoothukudi Firing Case - Madras High Court

Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், … Read more

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு… ஆனா இதற்கு தடையில்லை – ஐகோர்ட்

o panneerselvam

OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் … Read more

கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது – ஐகோர்ட்

chennai highcourt

Chennai High Court : கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரை சேர்ந்த 5 பேர் … Read more

சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Minister Udhayanidhi stalin - Madras high court

Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார். Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!  இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி … Read more

பாஜகவுக்கு தாமரை சின்னம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Lotus symbol

Chennai High Court : தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியதற்கு எதிராக டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையாமிடமும் அவர் கோரிக்கை மனுவும் அளித்திருந்தார்.  Read More – ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க … Read more

இதுதான் நிபந்தனை…  பணிப்பெண் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.! 

Madras High Court - Anto Merlina

Anto Merlina – கடந்த ஜனவரி மாதம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா, ஆகியோர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டனர். நீலாங்கரை பகுதியில் வசித்து வந்த ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோர் வீட்டில் பணிப்பெண்ணாக 17 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அந்த பணிப்பெண் அளித்த புகாரின் பெயரில் நீலாங்கரை பெண்கள் காவல் நிலையத்தில் வன்கொடுமை (சாதிய ரீதியில் திட்டுவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் … Read more

ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

O Panneerselvam

OPS – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உதவியுள்ளது. கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் , உறவினர் என ஓபிஎஸ் தொடர்புடையவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. Read More – … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை… 

Minister Thangam thennarsu

Thangam Thennarasu – தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் இன்றும் விசாரணை தொடர உள்ளது. முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களில் அவர்கள் போதிய ஆதாரமின்றி என கூறி விடுவிக்கப்பட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.  முன்னதாக முன்னால அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கும் சென்னை … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது.! 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு.!

Senthil Balaji case in madras high court

Senthil Balaji : தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால்இந்த கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை வட்டத்தில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல்வேறு முறை உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை … Read more