ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலை திறப்பு.! ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.!

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது.  

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஏற்கனவே,  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், திருவள்ளுவர், ஒவ்வையார் ,  மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் உருவ சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment