“ முதலைக்கண்ணீர்” – என்ன செய்ய போகிறீர்கள்..? – சபாநாயகரிடம் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்கி நடைபெற்று  வருகிறது. இந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. இந்த நிலையில், பயன்படுத்தக்கூடாது வார்த்தைகளில் முதலை கண்ணீர் இடம்  பெற்றுள்ளது. இதனையடுத்து, நேற்று பேசிய நிர்மலா … Read more

BigBreaking:பெட்ரோல் விலை ரூ.8 ,டீசல் விலை ரூ.7 குறைப்பு

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். கடந்த 45-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. We are reducing the Central excise duty … Read more

#BUDGET2022:மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார்.அவரைத் தொடர்ந்து,மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில்,இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை … Read more

பொதுத்துறை பொதுக் காப்பீட்டு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் இன்று நிறைவேற்றம்..!

பொதுத்துறை பொது காப்பீட்டு சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அமளிக்கிடையே,பொது காப்பீட்டு வர்த்தக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். கடந்த முறை மத்திய பட்ஜெட்டில் நாட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.அதன்படி, ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை, தனியார் மயமாக்குவது தொடர்பான … Read more

#BREAKING : உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு கோரி மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகொலும்பு தடை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது  சுங்க வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட  வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள … Read more

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! கொரோனா மருந்துகளுக்கான வரி ரத்து செய்யப்படுமா..?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த … Read more

இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் வீடு-IIT மெட்ராஸின் புதிய சாதனை

இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் வீட்டினை 5 நாட்களில் கட்டி IIT மெட்ராஸின் முன்னாள் மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். ஐ.ஐ.டி மெட்ராஸின்,டுவாஸ்டா என்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பினர்,கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் முதல் 3 டி பிரிண்டிங் வீட்டைக் கட்டியுள்ளனர்.சுமார் 600 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டில்,ஒரு படுக்கையறை,ஹால் மற்றும் ஒரு சமையலறை ஆகியவை உள்ளன. இந்த கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பமானது ஒரு ஆட்டோமேட்டிக் செயல் முறையாகும்.இந்த நுட்பத்தில்,ஒரு … Read more

மத்திய நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு.! இன்று மெகா புதிய திட்டம் அறிவிப்பா..?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  மதியம் 12.30 மணிக்கு டெல்லி செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. #BREAKING: 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை அளிக்க முடிவு.! கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக  திட்டத்தை நிதியமைச்சர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், தேவை மற்றும் மூலதன செலவினங்களை … Read more

நிறுவனங்களுக்கு பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த  பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால்  விளைவுகளைச் சமாளிக்கும் நிறுவனங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த உச்சி மாநாட்டில் உரையாற்றினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அப்பொழுது அவர் பேசுகையில், நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) இணைந்து செயல்பட்டு  வருகிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதம் இந்திய பொருளாதாரத்தில் பணப்புழக்கமாக … Read more

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது -நிர்மலா சீதாராமன்.!

ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள்,  என அனைவரும் பங்கேற்றனர். கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து  இந்த ஜிஎஸ்டி … Read more