#BREAKING : உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு கோரி மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகொலும்பு தடை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது  சுங்க வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட  வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கோரி, மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13-7-2021) கடிதம் எழுதியுள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.