சிறையில் இருந்து கொண்டு ஒருவரால் வாக்களிக்க முடியுமா.?

Election 2024 - Jail

Election2024 : சிறைவாசிகள் இந்திய தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் ஆவார். இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) முதல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பூத் சிலிப் வழங்கும் வேலைகள், வாக்காளர்கள் எங்கு சென்று வாக்களிக்க உள்ளனர் என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. வாக்குசாவடி … Read more

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை..! கைதான இருவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல்

Puducherry: புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் கைதான இரண்டு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியின் சடலம் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சோலைநகர் பகுதியை … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற கவலை 22-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு … Read more

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!

Senthil balaji july 12

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின்,  காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது. செந்தில் பாலாஜி 13 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்தது. இதனால், ஜாமீன் கிடைக்காமல் காவலில் செந்தில் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 12வது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 12வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொளி வாயிலாக மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரின் நீதிமன்ற காவலை டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். டந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது, … Read more

மருத்துவமனையில் சிகிச்சை… அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிச.4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக சென்னை முதனமை அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி முன்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல் நீட்டிக்கப்பட்டது. சட்டவிரோத பண … Read more

வரும் 15ம் தேதி வரை ரவுடி கருக்கா வினோத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு!

karukka vinoth

கடந்த 27-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு … Read more

#BREAKING: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை 22 வரை நீட்டித்து உத்தரவு!

பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை நீடித்தது நீதிமன்றம். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் சுசில் ஹரி பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாலியல் … Read more

சீர்காழி இரட்டை கொலை.. கொள்ளையர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!

சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி சென்றனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த 3 மணிநேரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது … Read more