உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின்,  காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது.

செந்தில் பாலாஜி 13 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் 14-வது முறையாக ஜாமீன் கோரிய வழக்கு நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.  இதனால், 14-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. ஜாமீன் கிடைக்காமல்  செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.

இதற்கு இடையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீட்டிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி செந்தில் பாலாஜி அமைச்சரவை நீடிப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய முடியும் எனக்கு கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

author avatar
murugan